இனிய வாழ்வு இல்லத்தில் இருந்து வள்ளிபுனம் மகாவித்தியாலத்தில் கல்விகற்ற விழிப்புல வலுவிழந்த மாணவன் ரஜீவன் பல்கலைக்கழக அனுமதியை பெற்றதை பாராட்டும் நோக்குடன் அம் மாணவனை வழிநடத்திய பாடசாலையையும் அப் பாடசாலை ஆசியர்கள் பற்றும் சமகாலத்தில் தெரிவான ஏனைய மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தும் நிகழ்வானது பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் பாடசாலை உயர்தர பிரிவு மாணவர்கள் , பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் உயர்தரப் பிரிவிற்கு கற்பித்த ஆசிரியர்கள் விது நம்பிக்கை நிதியத்தினர் உள்ளடங்கலாக இனிய வாழ்வு இல்ல உபதலைவரும் கலந்துகொண்டார்.
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களிற்கான சிறப்பு பரிசில்களும் தேநீர் விருந்துபசாரமும் இடம் பெற்றது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.