வட மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெறும் “கார்த்திகையில் மரம் நடுவோம்” திட்டத்திற்கமைவாக, விது நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் வலிவடக்கு முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர், விது நம்பிக்கை நிதிய தொண்டாளர்கள், மாவிட்டபுரம் நல்லிணக்கபுரம் வாழ் மக்கள், மாணவர் பிரதிநிதிகள் மற்றும் அறக்கொடையாளர்கள் இணைந்து, நல்லிணக்கபுரம் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை நடத்தினர். இந்நிகழ்வு பிரகாஷ் மற்றும் அவரின் தாயாரின் நிதி உதவியுடன், விது நம்பிக்கை நிதியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.